Archive for the ‘Politics’ category

இரு தேசம் பேசுவோர் எதற்காக சிறிலங்கா நாடாளுமன்றக் கதிரைகளுக்கு அடிபடுகிறார்கள்?

10/03/2010

இரு தேசம் பேசுவோர் எதற்காக சிறிலங்கா நாடாளுமன்றக் கதிரைகளுக்கு அடிபடுகிறார்கள்?
                                                                                                                           –

                                                                                                                         
இலங்கைத் தீவின் தமிழர்கள் மீது ‘பரிதாபப்பட்டு’, அவர்களைத் துயரத்தில் இருந்து மீட்டெடுக்கும் மீட்பர்களாக இப்போது பலர் தங்களைத் தாங்களே பிரகடனப்படுத்திக் கொண்டுள்ளார்கள். இவர்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களும் அடங்குவர். இவர்கள் தமிழ் மக்களின் மீட்சிக்காக எனக் கூறிக் கொண்டு புதிய அரசியல் கட்சிகளையும் உருவாக்கி வருகிறார்கள். இதில் கடைசியாக உருவாக்கப்பட்டிருப்பது ‘தமிழ்த் தேசியத்திற்கான முன்னணி’. ஜி.ஜி.பொன்னம்பலத்தின் பேரன் தலைமையில் இக்கட்சி செயற்படுகிறது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களில் வேறு சிலரும் (சிவாஜிலிங்கம், சிறிகாந்தா) தமது அரசியல் அபிலாஷைகளை அடைவதற்கு வசதியாக வேறு கட்சிகளை உருவாக்கி உள்ளார்கள். தமிழ்த் தேசியம், இறைமை உள்ள தனியரசு என்ற கோ~ங்களுடன் இக் கட்சிகள் உருவாக்கம் பெறுகின்றன.
அண்மைக் காலமாக ஈழத்து அரசியல்வாதிகளின் இச் செயற்பாடுகள் தமிழ் மக்களுக்கு ஒரு தெளிவான தகவலைத் தந்து நிற்கிறது. “மக்களே! இனிவரும் காலங்களில் தமிழர்களுக்கு ஏகப் பிரதிநிதிகள் என்று எவரும் இல்லை; நாங்கள் அனேகம் பிரதிநிதிகள் இருக்கிறோம்” என்பதுவே அந்தத் தகவல்.
ஏகம் அனேகமாகி விட்ட விந்தை கண்டு தமிழ் மக்கள் வியந்து நிற்கிறார்கள்.

(more…)