Archive for the ‘Uncategorized’ category

வன்னியில் நாடகச்செயற்பாடுகள்

07/08/2010

செயல் திறன் அரங்க இயக்கம் வன்னி பெருநிலப்பரப்பில் கடந்த 6-08-10,7-08-10 ஆகிய திகதிகளில் சிறுவர் நாடகப்பயிற்சி மற்றும் நாடகமேடையேற்றங்களை வவுனியா வடக்கு கல்வி வலயப்பணிப்பாளரின் ஒழுங்கமைப்பில் மேற்கொண்டிருந்தனர்.

களப்பயிற்சியல் 30 ஆசிரியர்கள் பங்கு பற்றினார்கள் பயிற்சி வளங்குனராக தே.தேவானந் செயற்பட்டார்.குழந்தை ம. சண்முகலிங்கத்தின் கண்டறியாத கதை நாடகம் நெடுங்கேணி மகா வித்தியாலயம்,புளியங்கூடல் இந்து மகா வித்தியாலயம்,கனகராயன் மத்திய மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் மேடையேற்றப்பட்டது.

யுத்தத்தினால் கடுமையாகப்பாதிக்கப்பட்ட இப்பிரதேசத்தில் முதல் தடவையாக மேற்கொள்ளப்பட்ட இம் முயற்சி பலரதும் பாராட்டைப் பெற்றிருந்தது